சென்னை: நகர்ப்புற தேர்தல் வாக்கு இயந்திரத்தில் NOTA பொத்தான் வைக்காதது அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்களை நிராகரிக்கும் அடிப்படை உரிமையை குடிமக்களிடம் இருந்து பறிக்கும் செயல் என அறப்போர் இயக்கம் தெரிவித்தது. NOTA பொத்தானை இணைக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறப்போர் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.